நாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களையும் ஏப்ரல் 02, 03 மற்றும் 06 ஆம் திகதிகளில் திறக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த மூன்று தினங்களிலும் அரசால் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக இலங்கை இராணுவத்தால் அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் தமது மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதற்கமை, ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது ஓய்வூதிய அட்டைகளை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் ஜாலிய சேனாரத்ன மேலும் கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை